பட்டாம்பூச்சி கூப்பிடும்.........

படம்: காவலன்
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: கே.கே , ரீட்டா
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே


பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே


எதைப் பெறுவது தானென்று
குறுக்கும் நெடுக்கும் குழந்தை போல
இதயம் குதித்தோட
தலையசைக்குது உன் கண்கள்
தவிதவிக்குது என்நெஞ்சம்
ஒரு தீ போல ஒருத்தி வந்து
உயிரைப் பந்தாட

ஞாபகம் உன் ஞாபகம்
அது முடியாத முதலாக
பூமுகம் உன் பூமுகம்
அது முடியாத முதல் பாகம்
இவள்தானே உன் இதழால் படிப்பாயோ
கண்ணிமையால் எனை
மூடி காதல் திறப்பாயோ


பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

அலைவரிசையில் நீ சிரிக்க
தொலைத்தொடர்பினில் நான் இருக்க
உதடும் உதடும் பேசும் போது
உலகை மறந்தேனே


மாலையில் மாலையில்
உன் மடி மீது விழுவேனே
மார்பினில் உன் மார்பினில்
நான் மருதாணி மழை தானே

வெண்ணிலவோ நெடுந்தூரம்
பெண்ணிலவோ தொடுந்தூரம்
உன்மழையில் நனைந்தாலே
காய்ச்சல் பறந்தோடும்

பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே
பட்டாம்பூச்சி கூப்பிடும் போது
பூவே ஓடாதே
காதல்தேனை சாப்பிடும் போது
பேசக் கூடாதே

யானைத் தந்தத்தின் சிலை நீயே – தினம்
ஏற்றும் தங்கத்தின் விலை நீயே
காதல் வீசிய வலை நீயே
என்னைக் கட்டி இழுத்தாயே.....
உனதருகினில் நானிருக்க
உயிர்க் கொழுந்தினில் பூ முளைக்க
இரண்டாம் முறையாய்
இதயம் துடிக்கப் புதிதாய்ப் பிறந்தேனே

கருத்துகள் இல்லை: