மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ........



படம்: ஊமைவிழிகள்
பாடியவர்: S.N.சுரேந்தர், B.S.சசிரேகா





மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா
கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா

கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனசு துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன்
கூடிவிட மனசு துடிக்குது...ஆ ஆ
கூடவந்த நாணம் தடுக்குது
கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது
உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா

சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா
பத்துவிரல் அணைக்கத்தானம்மா...ஓ ஓ
முத்து ரதம் எனக்குத்தானம்மா
உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது
உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது

கருத்துகள் இல்லை: